1953-இல் ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை பெற்று திருச்சி மத்தியச் சிறைச் சாலையில் இருந்த காலத்தில் கலைஞரால் எழுதப்பட்ட நாடகம். அம்மையப்பன் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான மேடைகளில் நிகழ்த்தப்பட்ட இந்நாடகம், ஆங்கில மொழி நாவல் ஒன்றின் உந்துதலால் எழுந்த கற்பனையின் விளைவு.